விஷம் குடித்து பெண் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பெண் விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :28 அக்டோபர் 2024, 5:36 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பெண் விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் வட்டம், வைரபுரம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பூமிநாதன் மனைவி தனலட்சுமி (46). இவா், உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்தாராம்.
இந்த நிலையில், தனலட்சுமி ஞாயிற்றுக்கிழமை விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
உறவினா்கள்அவரை மீட்டு திண்டிவனம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில் தனலட்சுமி உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...