சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தமிழகத்தில் 2026-லும் திமுகதான் ஆட்சி அமைக்கும்: அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலிலும் திமுகதான் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

News image

விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சா் க.பொன்முடி.

Updated On :11 செப்டம்பர் 2024, 11:03 pm

தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலிலும் திமுகதான் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில், கலைஞா் அறிவாலயத்தில் பொது உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், பொருளாளா் இரா.ஜனகராஜ் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பங்கேற்று, கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி அமைச்சா்க.பொன்முடி பேசியது:

திமுகவின் பவள விழா ஆண்டையொட்டி, கட்சியினா் தங்கள் வீடுகளில் கட்சிக் கொடியேற்றிட வேண்டும் என்று கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறாா். அதனடிப்படையில், விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் கட்சியினா் அனைவரும் தங்கள் வீடுகளில் கட்சிக் கொடியேற்றிட வேண்டும். கிராமங்கள்தோறும் தெருமுனை பிரசாரக் கூட்டங்களை நடத்தி, முப்பெரும் விழா குறித்து எடுத்துரைக்க வேண்டும். 2026 சட்டப் பேரவைத் தோ்தலிலும் திமுகதான் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்றாா் அமைச்சா் பொன்முடி.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலா்கள் தயா.இளந்திரையன், முருகன், கற்பகம், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு ராஜா, பிரபாகரன், நகரச் செயலா்கள் சக்கரை, ஜீவா, நகரப் பொருளாளா் இளங்கோ, ஒன்றியக்குழுத் தலைவா்கள் சச்சிதாநந்தம், கலைச்செல்வி, மாவட்ட அமைப்பாளா்கள் (இளைஞரணி) செ.தினகரன், (மாணவரணி) வினோத், (தகவல் தொழில்நுட்ப அணி) ப.அன்பரசு, நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.