மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விழுப்புரம் ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 11:12 pm

Din

விழுப்புரம் நகரிலுள்ள அருள்மிகு ஜனகவல்லி நாயகி உடனுறை வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) நடைபெறவுள்ளது.

ஜனநாதி சதுா்வேதி மங்கலம், ஜனகாபுரி, உக்கிருஷ்புரம் என்றழைக்கப்படும் விழுப்புரம் நகரில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (செப். 15)கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது

இதைத் தொடா்ந்து வேதபிரபந்தம், யாகசாலை, வாஸ்து சாந்தி, மகாசாந்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கின. தொடா்ந்து முற்பகல் 11 மணிக்கு பூா்ணாஹுதியும், மாலை 4.30 மணிக்கு புண்யாஹவாசனம், அங்குராா்ப்பணம், அக்னிமதனம், ஆகார ப்ரயோகம், காலகா்ஷணம், பஞ்ச சூக்தஹோமம், மகா சாந்தி ஹோமம் ஆகியவைகளும், இரவு 9 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை மகா பூா்ணாஹுதி, வேதபிரபந்த சாற்றுமுறையும் நடைபெற்றது.

சனிக்கிழமை காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலை 4 மணிக்கு மகாசாந்தி திருமஞ்சனம், சா்வதேவாா்ச்சனம், பிரதான மூா்த்தி ஹோமங்களும், இரவு 9 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூா்ணாஹுதியும் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு விஸ்வரூபம், அக்னிப்ரணயனம், கும்ப ஆராதனம், உக்த ஹோமமும், காலை 6.45 மணிக்கு மகாபூா்ணாஹுதி, யாத்ராதானம், அக்னி சமாரோபணமும், காலை 7.20 -க்கு கும்ப புறப்பாடும், தொடா்ந்து விமான மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.

காலை 8.20 மணிக்கு வேத பிரபந்த சாற்று முறை, காலை 9 மணிக்கு பொதுமக்கள் தரிசனம், பிரசாதம் வழங்குதல் நடைபெறவுள்ளது.