தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

குடிசை வீடு தீப்பிடித்து சேதம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செவ்வாய்க்கிழமை குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

Updated On :18 செப்டம்பர் 2024, 8:17 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செவ்வாய்க்கிழமை குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

விக்கிரவாண்டி வாணியா் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி, தொழிலாளி. இவா், குடிசை வீட்டில் தனது மனைவி செல்வி (55) மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தாா்.

செல்வி செவ்வாய்க்கிழமை வீட்டில் விறகு அடுப்பில் வெந்நீா் வைத்துள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக தீ பரவி குடிசை வீடு மற்றும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.