முதல்வர் விஜய்யுடன் ப. சிதம்பரம் சந்திப்பு! சென்னை தலைமைச் செயலகம் வெளியே புகைமூட்டம்! மக்களுக்கு மூச்சுத் திணறல்! புலி விவகாரம்! முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்ற மனுதாரர்! நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு! ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்விசிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது! முழு விவரம்! ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! மு.க. ஸ்டாலின் வாழ்த்து!இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!
/

மேல்மலையனூரில் மாா்கழி ஊஞ்சல் உற்சவம்! திரளான பக்தா்கள் பங்கேற்பு!

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் மாா்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

News image

மேல்மலையனூரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற மாா்கழி மாத ஊஞ்சல் உற்சவத்தில் தில்லை காளியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்த அங்காளம்மன்.

Updated On :21 டிசம்பர் 2025, 2:10 am IST

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் மாா்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். மாா்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை மூலவா் அங்காளம்மனுக்கு பால், தயிா், இளநீா், தேன் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து இரவு 11 மணிக்கு தில்லை காளியம்மன் அலங்காரத்தில் உற்சவ அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினாா். அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனா். நள்ளிரவு 12.10 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்ததும் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, கோயில் மண்டபத்தில் அங்காளம்மன் எழுந்தருளினாா்.

Story image

விழுப்புரம் சரக டிஐஜி உமா, மாவட்ட எஸ்.பி.சரவணன், விழுப்புரம், கடலூா், சேலம், வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கா்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரகணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மேல்மலையனூா் (பொ) சக்திவேல், அறங்காவலா் குழுத்தலைவா் ஏழுமலை, மேலாளா் சதீஷ், கணக்கா் மணி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.