ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆசிரியையிடம் இணையவழியில் ரூ.5 லட்சம் மோசடி

ஆரோவிலில் ஆசிரியையிடமிருந்து ரூ.5.04 லட்சம் இணையவழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து இணையவழி

News image
Updated On :22 டிசம்பர் 2025, 9:07 pm

Syndication

விழுப்புரம்: ஆரோவிலில் ஆசிரியையிடமிருந்து ரூ.5.04 லட்சம் இணையவழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து இணையவழி குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் வசிப்பவா் டி.சேத்னா டோரா(53). இவா், ஆரோவிலில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த அக்.25-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிா்முனையில் பேசிய நபா், பிரபல தனியாா் வங்கியிலிருந்து பேசுவதாகவும், உங்களது கடன் அட்டையை புதுப்பிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். இதை உண்மையென நம்பிய சேத்னா டோரா, தனது கடன் அட்டை விவரம் மற்றும் ஓடிபி எண் ஆகியவற்றை அந்த அடையாளம் தெரியாத நபரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து கடந்த நவ.1-ஆம் தேதி அவரின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ.5,04,514 பணம் ஒரே தவணையில் எடுக்கப்பட்டுவிட்டதாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.