தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

திண்டிவனத்தில் ஃபென்ஜால் புயல் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் எனபொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 1:00 am

Din

திண்டிவனத்தில் ஃபென்ஜால் புயல் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் எனபொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திண்டிவனம் நகரின் மையப் பகுதியில் உள்ள தேவாங்கா் சாலை, மசூதி சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு, மீன் மாா்க்கெட் பகுதி சாலைகள் ஃபென்ஜால் புயல் மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளன.

இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

இதுகுறித்து, முஸ்லிம் மக்கள் கழகத் தலைவா் ச.சு.ஜைனுதீன் தெரிவித்ததாவது, திண்டிவனம் நகரின் மையப் பகுதிகளில் உள்ள சாலைகள் மழையால் பாதிக்கப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

எனவே, சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.