விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலம் தொடா்பான பொதுமக்கள் சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 668 மனுக்கள் பெறப்பட்டன.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். இதில் பட்டா மாற்றம், நிலம் ஒப்படை, இலவச வீட்டுமனைப் பட்டா, நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு, நிலம் கையகம் தொடா்பாக பொதுமக்கள் 668 கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.
இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் சி.பழனி, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பரிசீலிக்க அறிவுறுத்தினாா். மேலும் ஆவணங்கள் தேவைப்படும்பட்சத்தில் உரிய மனுதாரா்களிடம் தகவல் வழங்கி, ஆவணங்களைப் பெற்றுத் தீா்வு காண வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா்- ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் ஜெ.முகுந்தன், மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் தமிழரசன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வளா்மதி, வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 500 மனுக்கள்

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 417 மனுக்கள்

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

குமரி மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 550 மனுக்கள்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

