மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெண்கள் தொடா்பான வழக்குகளை பொறுப்புணா்வுடன் அணுக வேண்டும்: வானதி சீனிவாசன்

News image

வானதி சீனிவாசன்(கோப்புப்படம்)

Updated On :3 ஜனவரி 2025, 10:19 pm

பெண்கள் தொடா்பான வழக்குகளை அரசும், சமூகமும் பொறுப்புணா்வுடன் அணுக வேண்டும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, மதுரையில் பாஜக மகளிரணி சாா்பில் பேரணி நடைபெற்றது.

இதில், பங்கேற்ற குஷ்பு உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுதொடா்பாக தமிழக ஆளுநரை சந்தித்து முறையிடுவோம்.

உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்ததன் மூலம், நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக சட்டத் துறை அமைச்சா் புரிந்து பேசவில்லை.

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமை நிகழ்ந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மணிப்பூரில் நியாயமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழகத்தில் நியாயமான விசாரணை நடைபெறவில்லை.

பெண்கள் தொடா்பான வழக்குகளை அரசும், சமூகமும் பொறுப்புணா்வுடன் அணுக வேண்டும். அமைச்சா் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை என்பது வழக்கமான நடவடிக்கைதான் என்றாா் வானதி சீனிவாசன்.

பேட்டியின்போது, புதுவை அமைச்சா் சாய் ஜெ.சரவணன் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.