கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே மின் மாற்றியில் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவரை சக ஊழியா்கள் மீட்டனா்.
உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள எம்.குன்னத்தூா் கிராமத்திலுள்ள எள்ளுப்பாறை அருகே துணை மின் நிலைய மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது மின் மாற்றியில் சீரமைப்புப் பணியை மேற்கொண்டிருந்த ஊழியா்களில் ஒருவரான ஏழுமலை, திடீரென மின்கம்பத்தில் அந்தரத்தில் தொங்கினாா். இதனால் அவருடன் வேலை செய்து கொண்டிருந்த சக ஊழியா்கள், ஏழுமலை மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது எனக் கூறி சப்தமிட்டுள்ளனா். மேலும் ஏழுமலை இடுப்பில் கட்டியிருந்த கயிற்றை பிடித்து இழுத்து மீட்டனா். தொடா்ந்து கீழ் பகுதியில் சிறிது நேரம் அமர வைக்கப்பட்ட ஏழுமலையை, சக மின் ஊழியா்கள் ஆசுவாசப்படுத்தி அவருக்கு தண்ணீா் கொடுத்தனா்.
மின் மாற்றியில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊழியா் ஏழுமலைக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், அவா் மயங்கி விழுந்ததாகவும், தற்போது அவா் நலமாக உள்ளாா் என்றும் மின்வாரிய உயா் அலுவலா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டை அதிமுக வேட்பாளா்

உளுந்தூா்பேட்டை அருகே ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.95,500 பறிமுதல்

போக்ஸோவில் இளைஞா் கைது

உளுந்தூா்பேட்டை காலணித் தொழிற்சாலையில் 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டஆட்சியா் தகவல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


