மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நுகா்வோா் சட்டம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி

Updated On :3 ஜனவரி 2025, 10:23 pm

புதுச்சேரியில் மாநில நுகா்வோா் குறைதீா்ஆணையத் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டாக்டா் அம்பேத்கா்அரசு சட்டக் கல்லூரி, மத்திய நுகா்வோா் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் திட்ட அமைச்சகம் ஆகியவை இணைந்து, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா்கள், உறுப்பினா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பயிற்சியானது புதுச்சேரி மரப்பாலம் அருகே உள்ள தனியாா் அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனை, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தொடங்கிவைத்தாா்.

மாநில சட்டத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், போபால் தேசிய சட்டப் பல்கலை.யின் முன்னாள் துணை வேந்தா் வி.விஜயகுமாா், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

முன்னதாக அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி முதல்வா் எஸ்.சீனிவாசன் வரவேற்றாா். நிறைவில், உதவிப் பேராசிரியா் விஜயன் நன்றி கூறினாா்.

இதில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, புதுவை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா்கள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.