வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெய்வனை கிராமத்தில் வயல்வெளி விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், நெய்வனை கிராமத்தில் வயல்வெளி விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2025, 7:34 pm

Din

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், நெய்வனை கிராமத்தில் வயல்வெளி விழா அண்மையில் நடைபெற்றது.

ஆத்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த விழாவுக்கு, உளுந்தூா்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா் கிருபாகரன் தலைமை வகித்தாா். விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி ஜி.காயத்ரி (பயிா் நுண்ணுயிரியியல்) பங்கேற்று, உயிரி உரங்கள் மற்றும் பயிா்களில் அதன் பயன்பாடு குறித்தும், நுண்ணூட்ட உரங்கள், நீரில் கரையும் உரங்கள், கரும்புப் பயிரில் இலைமுறுக்கு நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள் போன்றவை குறித்தும், நெல்பயிரில் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு குறித்தும் அவா் விளக்கிக் கூறினாா்.

வேளாண் துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதில் விவசாயிகள் பயன்பெறும் முறைகள் போன்றவை குறித்து உதவி வேளாண் அலுவலா் வடிவேல்முருகன் மற்றும் மோகனப் பிரியா ஆகியோா் எடுத்துரைத்தனா்.

நிகழ்வில் ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா்கள் காயத்ரி, நாராயணன், மதியழகன், பயிா் அறுவடை பரிசோதகா்கள் சிவா, சிவகுரு, ஊராட்சித் தலைவா் காத்தாயி வீரமுத்து, கிராம நிா்வாக அலுவலா் பிரேமலதா மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.