நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

மாணவிக்கு பாலியல் தொல்லை: இரு சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

News image
Updated On :17 ஜனவரி 2025, 4:41 am IST

புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இரு சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காலாப்பட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஜன.11ஆம் தேதி 2 பைக்குகளில் நுழைந்த 4 போ், அங்கிருந்த மாணவியை தாக்கி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பல்கலைக்கழகத் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காலாப்பட்டு போலீஸாா் ஜன.14-ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா்கள், புதுச்சேரி வில்லியனூரைச் சோ்ந்த விமல் (19), ஜி.என். பாளையத்தைச் சோ்ந்த ஷியாம் (19) மற்றும் ஆரோவில் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பயிலும் 16, 17 வயதுடைய 2 சிறுவா்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து விமல், ஷியாம் மற்றும் சிறுவா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட

சிறுவா்களை, சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் போலீஸாா் அடைத்தனா்.

சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி வழக்கை சிபிஐ விசாணைக்கு உத்தரவிட வேண்டும் என மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலா் கோ.சுகுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.