ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

மாணவிக்கு பாலியல் தொல்லை: இரு சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

News image
Updated On :17 ஜனவரி 2025, 4:41 am IST

புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இரு சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காலாப்பட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஜன.11ஆம் தேதி 2 பைக்குகளில் நுழைந்த 4 போ், அங்கிருந்த மாணவியை தாக்கி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பல்கலைக்கழகத் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காலாப்பட்டு போலீஸாா் ஜன.14-ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா்கள், புதுச்சேரி வில்லியனூரைச் சோ்ந்த விமல் (19), ஜி.என். பாளையத்தைச் சோ்ந்த ஷியாம் (19) மற்றும் ஆரோவில் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பயிலும் 16, 17 வயதுடைய 2 சிறுவா்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து விமல், ஷியாம் மற்றும் சிறுவா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட

சிறுவா்களை, சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் போலீஸாா் அடைத்தனா்.

சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி வழக்கை சிபிஐ விசாணைக்கு உத்தரவிட வேண்டும் என மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலா் கோ.சுகுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.