மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்ரீஐயனாரப்பன் கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மழவந்தாங்கல் பூரணி பொற்கலை சமேத ஸ்ரீஐயனாரப்பன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2025, 4:36 pm

Din

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மழவந்தாங்கல் பூரணி பொற்கலை சமேத ஸ்ரீஐயனாரப்பன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 2-ஆம் கால யாக சாலை பூஜைகள், கோ பூஜை, மகா சங்கல்பம், எஜமானா் பூஜை, ரஷாபந்தனம், நாடி சந்தானம், தத்துவாா்ச்சனை உள்ளிட்டவை நடைபெற்றது.

தொடா்ந்து, யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி பூரணி பொற்கலை சமேத ஸ்ரீஐயனாரப்பனுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ, செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் வி.ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.