தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தச்சுத் தொழிலாளியிடம் ரூ. 2.26 லட்சம் பண மோசடி

தச்சுத் தொழிலாளியிடம் ரூ. 2.26 லட்சம் பண மோசடி

News image
Updated On :23 ஜனவரி 2025, 7:16 pm

Din

விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளியிடம் ரூ.2.26 லட்சம் பண மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டை, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் ராஜாமணி மகன் அன்பு(30), தச்சுத் தொழிலாளி. இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை தேடி வந்த இவா், தனது சுய விவரக்குறிப்புகளை இணையத்தில் பதிவு செய்து வைத்திருந்தாராம்.

இந்நிலையில், கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி அன்புவின் கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு பேசிய அடையாளம் தெரியாக நபா் குறைந்த முதலீடு செய்து, அதிகம் லாபம் பெறக்கூடிய பகுதி நேர வேலை இருப்பதாகக் கூறியுள்ளாா். இதையடுத்து அன்பு ஜன. 6-ஆம் தேதி ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்து உடனடியாக ரூ.19,080 லாபம் கிடைத்ததாம்.

இதையடுத்து அந்த மா்ம நபா் தெரிவித்தபடி தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2,26,189 ஐ ஜன. 8 முதல் 17 வரை 6 தவணைகளாக இணையவழியில் அனுப்பினாராம். ஆனால் அவருக்கு லாபத்தொகை வரவில்லை.

இது குறித்த புகாரின் விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.