புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குட்டையில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே 2 வயது பெண் குழந்தை ஏரி குட்டையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :31 மார்ச் 2025, 5:54 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே 2 வயது பெண் குழந்தை ஏரி குட்டையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

திண்டிவனம் வட்டம், சாரம், இருளா் காலனி, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராம்குமாா் - செல்வி தம்பதியின் மகள் சுமித்ரா (2). இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே விளையாட சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லையாம். பெற்றோா் மற்றும் உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள ஏரிக்குட்டையில் குழந்தை சுமித்ரா இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஒலக்கூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.