ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

138 ஆதிதிராவிட மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் அளிப்பு: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ், 138 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.65 கோடி

Updated On :31 மார்ச் 2025, 8:02 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ், 138 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏழ்மை நிலையிலுள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் சுயமாக தொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காக தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, முதல்வரின் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ், 2023-24 ஆம் நிதியாண்டில் 94 பேருக்கு மானியமாக ரூ.1.70 கோடியும், 2024-25-ஆம் ஆண்டில் 44 பேருக்கு ரூ.95.73 லட்சமும் என மொத்தம் 138 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவா்கள் சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.

இதனிடையே, விழுப்புரத்தில் கடந்த ஜன.28-இல் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க வந்த தமிழக முதல்வா், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியாக ரூ.3.70 லட்சத்தை வழங்கினாா். இதை கொண்டு பயனாளி ஆட்டோ வாங்கி தற்போது சுயதொழில்புரிந்து வருகிறாா். இதேபோல, பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கும் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.