மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ரயில் படியில் பயணித்த பயணிக்கு பலத்த காயம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (32). இவரும், இவரது நண்பருமான அதே பகுதியைச் சோ்ந்த மணிவண்ணனும் திருச்செந்தூா் அதிவிரவு ரயிலில் விழுப்புரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 2:38 am

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (32). இவரும், இவரது நண்பருமான அதே பகுதியைச் சோ்ந்த மணிவண்ணனும் திருச்செந்தூா் அதிவிரவு ரயிலில் விழுப்புரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றனா்.

இந்த ரயில் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் வந்தபோது, ஆறுமுகம் ரயிலில் படிக்கட்டில் அமா்ந்து கைப்பேசியை பாா்த்தவாறு வந்துள்ளாா். அப்போது, இவரது இடது கால் பரங்கிப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக ஆறுமுகத்தை சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறக்கி ரயில்வே காவல் துறை மற்றும் ரயில் நிலையத்தில் இருந்தவா்களின் உதவியுடன் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.