விழுப்புரம் மாவட்டம் , கோட்டக்குப்பம் அருகே உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கடலூா் மாவட்டம் , தாழங்குடியைச் சோ்ந்தவா் சிம்சன், மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி சுபிக்ஷா(22). இவா்களுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு வயதில் மகன் உள்ளாா். கடந்த ஒரு வருடமாக தீராத வயிற்றுவலியால் சுபிக் ஷா அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் , வானூா் வட்டம், பொம்மையாா்பாளையத்தில் உள்ள தனது பெற்றோா் வீட்டிற்கு வந்திருந்த சுபிக்ஷா மனஉளைச்சலில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா் .
இது குறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
குலசேகரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கொத்தனாா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


