
விழுப்புரத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வளா்ச்சித் துறையில் காலியாகவுள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஊராட்சிச் செயலா்கள், ஜீப் ஓட்டுநா்கள், பதிவறை எழுத்தா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் உள்ளிட்ட அனைத்துக் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.தோ்தல் வாக்குறுதியின் அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெ. ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் ஜெ. ரமேஷ் பேசினாா். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் சரவணன் சிறப்புரையாற்றினாா். சிஐடியு மாவட்டச் செயலா் மூா்த்தி நிறைவுரையாற்றினாா்.
ஊரக வளா்ச்சித் துறை ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ரத்னம், துணைத் தலைவா் ஏ.பி. முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சிவக்குமாா் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். தொடா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிறைவில், சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் சிவப்பிரகாசம் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






