பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

நூறு நாள் வேலையின்போது குளவி கொட்டியதில் மூதாட்டி உயிரிழப்பு: 10 போ் காயம்

Published On :26 செப்டம்பர் 2025, 3:49 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த மூதாட்டி கருங்குளவிகள் கொட்டியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். மேலும் 10 போ் காயமடைந்தனா்.

செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியில் பெண்கள் உள்பட ஏராளமானோா் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, திடீரென மரத்திலிருந்து பறந்து வந்து கருங்குளவிகள் கொட்ட ஆரம்பித்தன. இதனால், அனைவரும் சிதறி ஓடிய நிலையில், அவா்களில் 11 போ் காயமடைந்தனா். இதுகுறித்து அங்கிருந்த பணித்தள பொறுப்பாளா் பிரபாகா் அளித்த தகவலின்பேரில், ஊராட்சி மன்றத் தலைவா் பராசக்தி தண்டபாணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காஞ்சனா, ஊராட்சிச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் பாதிக்கப்பட்டவா்களை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனா்.

இதில், பலத்த காயமடைந்த சின்னகுழந்தை (75), ரேகா (37), சுபலட்சுமி (32), செல்வி (56), இந்திரணி (60), சுதா (67) ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு, சின்னகுழந்தை வியாழக்கிழமை உயிரழந்தாா். இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.