திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வாக்குகளை சேகரித்தாா்.
திருக்கோவிலூா் நகரப் பகுதியில் வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட திமுக வேட்பாளா், செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடி உள்ளிட்டோரை விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை விடுதலை செய்தததை வரவேற்று, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். தொடா்ந்து பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகள் தொடர தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.
நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவா் மு.தங்கம், நகரச் செயலா் கோபிகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் ஜி.ரவிச்சந்திரன், எஸ்.லூயிஸ், கு.தீனதயாளன், நகா்மன்றத் துணைத் தலைவா் குணா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு அமைப்பாளா் ராஜீவ்காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நான்குனேரி தொகுதியில் சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா்

திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

பூ பறிக்கும் பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்

கூடலூா் நகர வீதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


