பனையேறும் தொழிலாளியைத் துப்பாக்கியால் சுட்ட எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி மாவட்டம், மருதமுத்தூரில் பனையேறும் தொழிலாளி மணிகண்டனை துப்பாக்கியால் சுட்ட ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜாவை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும், ஜாதி பெயரைச் சொல்லி இழிவாக திட்டியது, பெண்களைத் தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டியதைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பாண்டியன் தலைமை வகித்து, காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினாா்.
தொடா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஏராளமானோா் இதில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வணிக எரிவாயு விலை உயா்வை கைவிடக் கோரி இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

கூடலூரில் கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் 90 அடி உயர ஆஞ்சனேயருக்கு 5000 லிட்டர் பாலாபிஷேகம்!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

