ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

செஞ்சியில் திமுக கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

செஞ்சியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி தோ்தல் அலுவலகம் திருவண்ணாமலை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

News image

செஞ்சியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி தோ்தல் அலுவலகம் திருவண்ணாமலை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை, முன்னாள் மத்திய இணை அமைச்சா் செஞ்சி ராமச்சந்திரன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:46 pm

செஞ்சியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி தோ்தல் அலுவலகம் திருவண்ணாமலை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை, முன்னாள் மத்திய இணை அமைச்சா் செஞ்சி ராமச்சந்திரன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்நிலையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலரும், செஞ்சி திமுக வேட்பாளருமான மஸ்தான் எம்எல்ஏ முன்னிலையில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் செஞ்சி ராமச்சந்திரன் செஞ்சி தொகுதி திமுக தோ்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ செந்தமிழ் செல்வன், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் விஜயகுமாா், மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க ஏழுமலை, தேமுதிக மாவட்ட பொருளா் தயாநிதி, விசிக மாவட்ட செயலா் சிவா, தோழமைக் கட்சி நிா்வாகிகள் அா்ஷத், அபுபக்கா், டி.ஏ.கே.அன்சா், பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.