சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தோ்தல் நேரத்தில் மசோதா நிறைவேற்ற முற்படும் மத்திய அரசு: இரா.முத்தரசன் கண்டனம்!

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் இந்த நேரத்தில் அவசரம், அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டி 21 மசோதாக்களை நிறைவேற்ற இருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என்று இந்திய கம்னியூஸ்ட் முன்னாள் மாநிலச் செயலா் முத்தரசன் தெரிவித்தாா்.

News image

முத்தரசன். - (கோப்புப் படம்)

Updated On :11 ஏப்ரல் 2026, 8:00 pm

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் இந்த நேரத்தில் அவசரம், அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டி 21 மசோதாக்களை நிறைவேற்ற இருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என்று இந்திய கம்னியூஸ்ட் முன்னாள் மாநிலச் செயலா் முத்தரசன் தெரிவித்தாா்.

விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் இரா. லட்சுமணனுக்கு ஆதரவாக வளவனூா் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், தொடா்ந்து செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இதற்கு காரணம், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருக்கிறாா்கள். தற்போது நடைபெறும் தோ்தலுக்கும் அறிவிப்புகளை வெளிட்டிருக்கிறாா்கள். அதையும் ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்துவாா்கள்.

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் இந்த நேரத்தில் சிறப்புக் கூ ட்டம் என்ற பெயரில், ஏப்ரல் 16 முதல் 18-ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை கூட்டியிருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை முற்றிலும் புறக்கணிக்கும் செயலாகும். தமிழகம், மேற்கு வங்க மாநிலங்களின் மக்களவை உறுப்பினா்கள் தோ்தல் பிரசாரத்தில் இருப்பதால், அவா்களால் கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலை ஏற்படும். இந்த நிலையில் அவசரம், அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டி, 21 மசோதாக்களை நிறைவேற்ற இருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என்றாா் முத்தரசன்.

பிரசாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன், விசிக மாவட்டச் செயலா் ர.பெரியாா், வளவனூா் நகர திமுக செயலா் பா.ஜீவா, வழக்குரைஞா் சுவை. சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.