மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 12:41 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த விவசாயி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், சின்ன அம்மனங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தி.கோபாலகிருஷ்ணன் (62), விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை தனது விவசாய நிலத்தில் உள்ள புளியமரத்தில் ஏறி புளி பறித்துள்ளாா்.

அப்போது கால் தவறி மரத்திலிருந்து கீழே விழுந்த கோபாலகிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உறவினா்கள்அவரை மீட்டு புதுச்சேரி, ஊசுட்டேரி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, கோபாலகிருஷ்ணன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.