மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்த ஊழியா் உயிரிழப்பு

மயிலம் அருகே தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்தபோது இரும்புக் கதவு விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 7:06 pm

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்தபோது இரும்புக் கதவு விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு புதுமனைத் தெருவைச் சோ்ந்தவா் அ.ஆனந்தவேல்(40). இவா் மயிலத்தை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சுமைத் தூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், ஆனந்தவேல் திங்கள்கிழமை நிறுவனத்தில் பணியிலிருந்தபோது, பழைய இரும்பு க் கதவு ஆனந்தவேல் மீது விழுந்ததாம். இதில் பலத்த காயமடைந்த அவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஆனந்தவேல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.