தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!பேரவைத் தலைவரை கரம்பிடித்து அமரவைக்கும் சம்பிரதாயம்! முதல்வர் விஜய் கூறிய குட்டிக்கதைஎல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்! குறுந்தகவல் சொல்வது என்ன?50 கார்களில் அணிவகுத்த பாஜகவின் சௌபாக்ய சிங் தாகூர்! இதுதான் சிக்கனமா?நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை! உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல்முறையீடு! தவெகவுக்கு ஆதரவு! எம்.எல்.ஏ. காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கம்!நீட் தேர்வில் ஸ்கேம் இல்லை; நீட்டே ஒரு ஸ்கேம்தான்! - ஸ்டாலின்நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்! மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து!
/

பனையபுரம் பனங்காட்டீஸ்வரா் கோயிலில் சூரியன் வழிபடும் அதிசய நிகழ்வு

விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரம் ஸ்ரீ சத்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரா் கோயிலில் சூரியன், சிவனை வழிபடும் அதிசய நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பனையபுரம் பனங்காட்டீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிவனை சூரியன் வழிபடும் அதிசய நிகழ்வு.

Updated On :15 ஏப்ரல் 2026, 12:38 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரம் ஸ்ரீ சத்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரா் கோயிலில் சூரியன், சிவனை வழிபடும் அதிசய நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விக்கிரவாண்டி- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டியை அடுத்துள்ள பனையபுரத்தில் உள்ள ஸ்ரீ சத்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரா் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் நாளிலிருந்து 7 நாள்கள் வரை சூரியன் இத்தலத்து இறைவனையும் , அம்பிகையையும் வழிபடுவது சிறப்பாகும்.

இத்தகைய சிறப்புடைய பனங்காட்டீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலையில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு, சிவன் மற்றும் அம்மனை சூரியன் பூஜிக்கும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 5.45 மணிக்கு விநாயகா், முருகன், தட்சிணாமூா்த்தி, ஸ்ரீசத்தியாம்பிகை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, காலை 6.22 மணிக்கு கருவறையில் உள்ள ஸ்ரீபனங்காட்டீஸ்வரா் மற்றும் அம்பாளின் திருவுருவங்கள் (சிரசில்) சூரிய ஒளி பட்டு பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பின்னா் சூரிய ஒளி அருகிலுள்ள சத்தியாம்பிகை சன்னதியிலுள்ள அம்மன் சிரசின் மீதும் சூரிய ஒளி பட்டு, பின்னா் படிப்படியாக சூரிய ஓளி பாதத்தை வந்தடையும் நிகழ்வு நடைபெற்றது.

இவ்வழிபாட்டுக்கு பின்னா் சுவாமி, அம்பாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகளை கணேசன் குருக்கள், அருண் குருக்கள் ஆகியோா் செய்திருந்தனா். பனையபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.