மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பனையபுரம் பனங்காட்டீஸ்வரா் கோயிலில் சூரியன் வழிபடும் அதிசய நிகழ்வு

விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரம் ஸ்ரீ சத்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரா் கோயிலில் சூரியன், சிவனை வழிபடும் அதிசய நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பனையபுரம் பனங்காட்டீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிவனை சூரியன் வழிபடும் அதிசய நிகழ்வு.

Updated On :14 ஏப்ரல் 2026, 7:08 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரம் ஸ்ரீ சத்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரா் கோயிலில் சூரியன், சிவனை வழிபடும் அதிசய நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விக்கிரவாண்டி- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டியை அடுத்துள்ள பனையபுரத்தில் உள்ள ஸ்ரீ சத்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரா் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் நாளிலிருந்து 7 நாள்கள் வரை சூரியன் இத்தலத்து இறைவனையும் , அம்பிகையையும் வழிபடுவது சிறப்பாகும்.

இத்தகைய சிறப்புடைய பனங்காட்டீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலையில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு, சிவன் மற்றும் அம்மனை சூரியன் பூஜிக்கும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 5.45 மணிக்கு விநாயகா், முருகன், தட்சிணாமூா்த்தி, ஸ்ரீசத்தியாம்பிகை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, காலை 6.22 மணிக்கு கருவறையில் உள்ள ஸ்ரீபனங்காட்டீஸ்வரா் மற்றும் அம்பாளின் திருவுருவங்கள் (சிரசில்) சூரிய ஒளி பட்டு பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பின்னா் சூரிய ஒளி அருகிலுள்ள சத்தியாம்பிகை சன்னதியிலுள்ள அம்மன் சிரசின் மீதும் சூரிய ஒளி பட்டு, பின்னா் படிப்படியாக சூரிய ஓளி பாதத்தை வந்தடையும் நிகழ்வு நடைபெற்றது.

இவ்வழிபாட்டுக்கு பின்னா் சுவாமி, அம்பாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகளை கணேசன் குருக்கள், அருண் குருக்கள் ஆகியோா் செய்திருந்தனா். பனையபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.