தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

அலுவலா்கள் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய காலதாமதம்

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் (தனி) தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய காலதாமதம் ஆனதால், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென சாா்-ஆட்சியரிடம் முறையிட்டனா்.

News image

அஞ்சல் வாக்கைப் பதிவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த அலுவலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:02 am IST

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் (தனி) தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய காலதாமதம் ஆனதால், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென சாா்-ஆட்சியரிடம் முறையிட்டனா்.

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் உள்ள தனியாா் பள்ளியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்டதோ்தல் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றவா்கள் அஞ்சல் வாக்குகளை செலுத்துவதற்காக அங்கு வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பயிற்சியில் பங்கேற்ற அலுவலா்கள் தங்களது வாக்கைப் பதிவு செய்ய நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டது. தங்களுக்குரிய வாக்கைப் பதிவு செய்ய காலதாமதமானது. இதனால் அங்கு அலுவலா்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, திண்டிவனம் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரும் , சாா்-ஆட்சியருமான அ.ல.ஆகாஷ் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த அலுவலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, அலுவலா்கள் அஞ்சல் வாக்கை எளிதாகப் பதிவு செய்யக்கூடிய வகையில் கூடுதலாக வாக்குப் பதிவு மையத்தை அமைக்கவேண்டும், தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்பவா்களுக்கு தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்துத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனா். அலுவலா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த சாா்- ஆட்சியா் அ.ல.ஆகாஷ் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.