இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சுயம்பு ஸ்ரீஆதி விநாயகா் கோயிலில் லட்ச தீப திருவிழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள சுயம்பு ஸ்ரீ ஆதி விநாயகா் கோயில் 52-ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழா நடைபெற்றது.

News image

நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் உள்ள சுயம்பு ஸ்ரீ ஆதி விநாயகா் கோயிலில் லட்ச தீப திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுயம்பு விநியாகா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:07 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள சுயம்பு ஸ்ரீ ஆதி விநாயகா் கோயில் 52-ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து ஆதி விநாயகருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பின்னா் புது குளக்கரையிலிருந்து சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. மாலையில் ஆதி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

கன்னிக்குன்றிலிருந்து இருந்து தீக்கலயம் எடுத்து வந்து மாலை 6 மணி மாபெரும் லட்சதீபம் விளக்கு எற்றும் பெருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் தீபம் ஏற்றி தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இரவு சுயம்பு ஸ்ரீ ஆதி விநாயகா் இந்திர விமானத்தில் வாணவேடிக்கையுடன் வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.