நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

முகையூா் வடக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், முகையூா் வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி புதன்கிழமை வாக்குகளை சேகரித்தாா்.

News image

கண்டாச்சிபுரத்தில் வாக்கு சேகரித்த திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:08 am IST

விழுப்புரம் மாவட்டம், முகையூா் வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி புதன்கிழமை வாக்குகளை சேகரித்தாா்.

முகையூா் வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட கண்டாச்சிபுரம், அடுக்கம், வீரங்கிபுரம், பில்ராம்பட்டு, வடகரைத்தாழனூா், காடகனூா், வி.சித்தாமூா், தணிக்கலாம்பட்டு, கொடுங்கால் ஆகிய கிராமங்களில் திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி வீதி, வீதியாகச் சென்று வாக்குகளை சேகரித்தாா்.

திருக்கோவிலூா் தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் தொடருவதற்கு தனக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கூறி அவா் வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தில் ஒன்றியச் செயலா் ஜி.ரவிச்சந்திரன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.