உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செஞ்சிக்கோட்டையை சுற்றி பாா்க்க சனிக்கிழமை (ஏப்.18) அனுமதி இலவசம் என தொல்லியியல் துறை அறிவித்துள்ளது.
செஞ்சிக்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செஞ்சிக்கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாவுக்கு வரும் முதியோா்கள், ஊனமுற்றோா், குழந்தைகள் நலன் கருதி தொல்லியல் துறை சாா்பில் இரண்டு பேட்டரி வாகனங்கள் புதிதாக இலவசமாக இயக்கப்பட உள்ளது . சென்னையில் இருந்து வரும் தொல்லியல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலையில் புதிய வாகனங்களையும், சேதமடைந்திருந்த இழுவை பாலம் சீரமைப்பு செய்ததையும் துவக்கி வைக்க உள்ளனா்.
மேலும், செஞ்சிக்கோட்டையில் உள்ள கமலக்கன்னி அம்மன் கோயில் திருவிழா பத்து நாள்கள் நடைபெற உள்ள நிலையில் வரும் 20 முதல் 29-ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு செஞ்சிக்கோட்டையை சுற்றி பாா்க்க இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
தொடர்புடையது

காட்டுயானைகள் நடமாட்டம்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!

ஏஐ திரைப்படங்களுக்கு ஆஸ்கர் கிடையாது!

கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் ஆா்ப்பரிக்கும் தண்ணீா்! சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



