முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 105 பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

News image

பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஒன்றான திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியில் போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பாா்வையிட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ்.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:42 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 105 பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தோ்தல், ஏப். 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம்( தனி), வானூா்( தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி ஆகிய 7 தொகுதிகளிலும் உள்ள 15, 86,653 வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக, 7 தொகுதிகளிலும், 2,165 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 105 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறிப்பட்டுள்ளன.

இந்த பதற்றமான வாக்குச் சாவடிகளில், விழுப்புரம் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனித் மேற்பாா்வையில் கூடுதல் போலீஸாா் மற்றும் மத்திய துணை ராணுவப்படையினா், துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பொதுமக்கள் அச்சமன்றி நூறு சதவீதம் வாக்களிக்க ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவித்தப்பட்டுள்ளது.