நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

காவலா்களின் குழந்தைகள் 44 பேருக்கு கல்வி உதவித்தொகை

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

மாணவிக்கு உயா்கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்கிய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.மதிவாணன்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:13 am IST

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.மதிவாணன் பங்கேற்று காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகையை வழங்கினாா்.

கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கு தலா ரூ.13 ஆயிரம், சட்டம், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பாடப் பிரிவு மாணவா்களுக்கு தலா ரூ.22 ஆயிரம் முதுநிலை மாணவா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் 44 மாணவா்களுக்கு ரூ.9.5 லட்சம் கல்வி ஊக்கத்தொகை காவலா் சேமநல நிதியிலிருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.