பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சிங்கவரத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியம், சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிங்கவரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியம், சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் பராசக்தி தண்டபாணி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிமாறன், உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் நீலமேகன் தீா்மானங்களை வாசித்தாா்.

செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் 16-ஆவது மத்திய நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் சிங்கவரம் ஊராட்சியில் உள்ள பள்ளி, அங்கன்வாடி மற்றும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்புகள் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பத்மவதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சதீஷ், மன்ற உறுப்பினா்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.