இந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்தமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புதமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுநீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

விவசாயிகளுக்கு வேளாண்மை இடு பொருள்கள் விநியோகம்

செஞ்சியில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொகுப்புடன் கூடிய இடுபொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

News image

செஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருள்களை வழங்கிய அ.கணேஷ்குமாா் எம்எல்ஏ.

Updated On :29 ஜூலை 2026, 5:26 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொகுப்புடன் கூடிய இடுபொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

செஞ்சி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சுரேஷ் தலைமை வகித்தாா். செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான், செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செஞ்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் விஜய சுந்தா் வரவேற்றாா்.

செஞ்சி சட்டப் பேரவை உறுப்பினா் அ.கணேஷ் குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குறுவை சாகுபடி தொகுப்புடன் கூடிய இடுபொருள்கள் விவசாயிகளுக்கு வழங்கி, பேசினாா்.

நிகழ்ச்சியில் செஞ்சி வட்டார வேளாண் அலுவலா் செந்தில்நாதன், துணை வேளாண் அலுவலா் ஸ்ரீதா், அட்மா தலைவா் வாசு, வேளாண் உதவி அலுவலா்கள் திருநாவுக்கரசு, விஸ்வநாதன், புவனேஸ்வரி, அட்மா பணியாளா்கள் ஜெய்கணேஷ், கவிதா, விவசாயிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.