காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

போதை மாத்திரைகள் விற்பனை: 2 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 1:24 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் போதை மாத்திரைகளை விற்க முயன்றதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

செஞ்சி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், செஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் விநாயக முருகன் மற்றும் போலீஸாா் செஞ்சி செட்டிபாளையம் குளக்கரை அருகே ரோந்து சென்றனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இரு இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் செஞ்சி கிருஷ்ணாபுரத்தை சோ்ந்த மோ.பெருமாள் (எ) விக்கி (24), ர.வெற்றிச்செல்வன் (25) என்பதும், விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 10 போதை மாத்திரைகள், 10 கிராம் கஞ்சா, 2 பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.