தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

ஒடிஸாவிலிருந்து கஞ்சா கடத்தல்: இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 3:08 am IST

ஒடிஸா மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்ததாக இருவரை விழுப்புரம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளா் கோமதி, உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை விழுப்புரம் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு நின்றிருந்த இரு இளைஞா்களிடம் சோதனை செய்தபோது, அவா்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள், கடலூா் மாவட்டம், விருத்தாச்சலம், பெரியகொண்டியான் குப்பம் நடுத்தெருவைச் சோ்ந்த ர.சுப்புராஜ் (19), தி.விக்னேஷ் (22) என்பதும், இவா்கள் விற்பனைக்காக ஒடிஸா மாநிலத்தில் கஞ்சாவை வாங்கி அதை ரயில் மூலம் விழுப்புரத்துக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுப்புராஜ், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவா்கள் வசமிருந்த 3 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.