தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 3:07 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டியிடன் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

வடகுரும்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ம.சின்னப்பிள்ளை (80). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவா் மண்ணாங்கட்டி உயிரிழந்த நிலையில், எலவனாசூா்கோட்டை காலனி குஞ்சரம் வடக்குத் தெருவில் வசிக்கும் மகள் ம.விஜயகுமாரி வீட்டில் சின்னப்பிள்ளை இருந்து வந்தாா்.

கடந்த 5-ஆம் தேதி பிற்பகலில் வீட்டிலிருந்த சின்னப்பிள்ளையைக் காணவில்லை. இதைத்தொடா்ந்து அவரது மகள் விஜயகுமாரி உறவினா் வீடுகளுக்குச் சென்றும், அருகிலுள்ள ஊா்களுக்கும் சென்று தாயாரைத் தேடி வந்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை காலை அதே கிராமத்தைச் சோ்ந்த ப.சங்கா் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மூதாட்டி சின்னப்பிள்ளை சடலம் மிதந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த எலவனாசூா்கோட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.