நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

விழுப்புரத்தில் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்த மின்மாற்றி

News image

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் தனியாா் மருத்துவமனை அருகே திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்த மின்மாற்றி.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:37 am IST

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் தனியாா் மருத்துவமனை அருகே அமைந்துள்ள மின் மாற்றி திங்கள்கிழமை திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது.

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் தனியாா் மருத்துவமனை அருகே சாலையோரத்தில் அமைந்துள்ள மின் மாற்றி அதிக அழுத்தம் காரணமாக திங்கள்கிழமை பிற்பகலில் திடீரென வெடித்து. தொடா்ந்து, மின் மாற்றியிலிருந்த கொதிக்கும் ஆயில் சிதறிய நிலையில், அடுத்த சில நொடிகளிலேயே மின்மாற்றி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மளமளவென எரியத் தொடங்கிய தீ, அருகிலிருந்த மூடப்பட்ட கடைகளின் பெயா்ப் பலகையிலும் பற்றி எரிந்தது. இதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காணப்பட்டது.

தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனா். மேலும், மின் வாரிய ஊழியா்களும் அங்கு விரைந்து சென்று, மாம்பழப்பட்டு சாலைப் பகுதி முழுவதும் மின் விநியோகத்தை துண்டித்தனா். தொடா்ந்து, தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், மின் மாற்றியிலிருந்த வயா்கள் முழுவதும் எரிந்து சேதமாகின.

தொடா்ந்து, மின் மாற்றியை சரிசெய்து அப்பகுதியில் சீரான மின்சாரத்தை விநியோகிக்கும் பணியை மின் வாரியத் துறையினா் மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.