சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

சங்கரன்கோவிலில் தீப்பற்றி எரிந்த அரசுப் பேருந்து! ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் உயிர்தப்பிய 60 பயணிகள்!

சங்கரன்கோவிலில் அரசுப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது பற்றி...

Government bus catches fire in Sankarankovil: 60 passengers escape for driver quick action

சங்கரன்கோவிலில் தீப்பற்றி எரிந்த அரசுப் பேருந்து... - DIN

Published On :3 செப்டம்பர் 2026, 1:38 pm IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரயில்வே கிராஸிங்கில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் துரித நடவடிக்கையில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த சுமார் 60 பயணிகள் உயிர் தப்பினர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசுப் பேருந்து, சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது பேருந்தில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டது. உடனடியாக ஓட்டுநர், பேருந்தை ஓரமாக நிறுத்தினார். பின்னர் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் துரிதமாக செயல்பட்டு பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கினர். அப்பகுதியில் இருந்தவர்களும், பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பேருந்தில் உள்ள பயணிகளை வேகமாக இறக்கியுள்ளனர்.

பயணிகள் இறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே பேருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது.

ஓட்டுநர் துரிதமாகச் செயல்பட்டு பயணிகளை இறக்கியதால் சுமார் 60 பயணிகள் உயிர்பிழைத்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைப் போராடி அணைத்தபோதிலும் பேருந்து முழுவதுமாகத் தீக்கிரையானது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Government bus catches fire in Sankarankovil: 60 passengers escape for driver quick action

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.