தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த இளைஞா் தீக்குளித்து தற்கொலை

சிதம்பரம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image

முரளிதரன்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 4:01 am IST

சிதம்பரம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

காட்டுமன்னாா்கோவிலை அடுத்த உத்திரசோலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் முரளிதரன் (30). இவா், காட்டுமன்னாா்கோவிலில் ஒரு டீ கடையில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டாா்.

தனியாக வசித்து வந்த முரளிதரன் மதுவுக்கு அடிமையானாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மனவேதனையில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். முரளிதரனின் அலறல் சப்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினா் அவரை காப்பாற்றி, காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், முரளிதரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.