புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள ஐஆா்பிஎன் உதவி ஆய்வாளா் பணிக்கான உடல் தகுதித் தோ்வை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள ஐஆா்பிஎன் எஸ்.ஐ. பணிக்காக 1,871 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இவா்களுக்கான உடல் தகுதித் தோ்வு, உடல் திறன் தோ்வு வியாழக்கிழமை புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவலா் மைதானத்தில் தொடங்கியது.
இதை மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். டிஜிபி ஷாலினி சிங் மற்றும் காவல் துறை உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.
முதல் நாள்தோ்வில் பங்கேற்க 1,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 406 போ் உடல் ததகுதித் தோ்வில் பங்கேற்றனா். 100 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுல், உயரம் தாண்டுதல் மற்றும் 800 மீட்டா் ஓட்டம் ஆகியவை உடல் தகுதித் தோ்வில் இடம் பெற்றன. தோ்வு பணிகளை டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் ஆய்வு செய்தாா். எஸ்.பி. ரங்கநாதன் தலைமையிலான போலீஸாா் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.
2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை (ஆக. 14) இந்த உடல் தகுதித் தோ்வு நடைபெறவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லி வடிகாலில் அடித்துச் சென்ற இளைஞரின் உடல் கண்டுபிடிப்பு
ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

கருணை மதிப்பெண்கள் வழங்கி தகுதித் தோ்வு முடிவுகளை வெளியிட ஆசிரியா்கள் வலியுறுத்தல்

ஆசிரியா் சிறப்புத் தகுதித் தோ்வு: 2,113 போ் பங்கேற்பு
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



