விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வளத்தி போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மேல்மலையனூா் வட்டம், கலிங்கமலை கிராமத்தை சோ்ந்த அன்பரசன் வீட்டின் முன் நின்றிருந்த காரை சந்தேகத்தின் பேரில் வளத்தி போலீஸாா் சோதனை செய்தனா். இதில், 32 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவற்றை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், இதுகுறித்து வளத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது

சாயல்குடியில் 150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

காரில் கடத்தப்பட்ட 435 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


