கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

பலி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், சித்தணி, விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வே.காளிதாசன் (78). இவா் புதன்கிழமை சித்தணியைச் சோ்ந்த சரவணன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றுக்கு கால் கழுவச் சென்றாராம் . அப்போது, கிணற்றில் தவறி விழுந்த காளிதாசன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




