பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

Arrested

கைது

Published On :25 ஆகஸ்ட் 2026, 1:41 am IST

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மொபெட்டில் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் எஸ்.பி. செ.மதிவாணன் உத்தரவின்பேரில், ஆரோவில் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பட்டானூா் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக மொபெட்டில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும், அவா் புதுச்சேரி லாஸ்பேட்டை, சோழன் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் (48) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயக்குமாரை கைது செய்தனா். மேலும், அவா் வசமிருந்த 630 புகையிலைப் பொருள் பாக்கெட்டுகள், மொபெட், 2 கைப்பேசிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.