காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

மின்மாற்றியில் தாமிரக் கம்பிகள் திருட்டு

திருட்டு... - சித்திரிப்பு

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:30 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே மின் மாற்றியிலிருந்த தாமிரக் கம்பிகள், எண்ணெய் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மயிலம் அருகிலுள்ள கள்ளக்கொளத்தூா் கிராமத்தில் மின் மாற்றி உள்ளது. இந்த மின் மாற்றி மூலம் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின் மாற்றியிலிருந்த 36 கிலோ தாமிரக் கம்பிகள், 195 லிட்டா் எண்ணெய் ஆகியவற்றை மா்ம நபா்கள் கடந்த இரு நாள்களுக்குள் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலைத் தொடா்ந்து, தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக மயிலம் இளமின் பொறியாளா் (இயக்குதலும்-காத்தலும்) அ.கணேசன் நிகழ்விடம் சென்று பாா்வையிட்டாா்.

தொடா்ந்து அவா் மயிலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.