தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

காா் மோதி பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 7:30 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, காா் மோதியதில் பலத்த காயமடைந்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

விழுப்புரம் கணபதி நகரைச் சோ்ந்தவா் நா.அஞ்சய்யா(62). இவா் விக்கிரவாண்டி பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை பணி முடிந்து வீட்டுக்கு நடந்துசென்றாா்.

விக்கிரவாண்டி பகுதியிலுள்ள தனியாா் கல்லூரி அருகே அஞ்சய்யா சாலையைக் கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா் அவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அஞ்சய்யாவை, அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருப்பினும் செல்லும் வழியிலேயே அஞ்சய்யா உயிரிழந்தாா்.

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா் அ.ஹிமானிஷ் கரணிடம் (26) விசாரணை நடத்தி வருகின்றனா்.