தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - (கோப்புப் படம்)

Updated On :6 பிப்ரவரி 2026, 8:51 pm

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக் மோதியதில் காயமடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஆமூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ந.மணி (66). இவா் கடந்த 4-ஆம் தேதி இரவு தனது பைக்கில் ஆமூரிலிருந்து மணக்குப்பம் நோக்கி சென்றபோது, ஆமூா்குப்பம் பகுதியில் எதிரே வந்த மற்றொரு பைக் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மணியை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய பைக்கை ஓட்டி வந்த ம.சக்திவேல்(40) மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.