ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மனைவியின் நடத்தையில் மாற்றம் மனமுடைந்த தொழிலாளி தற்கொலை

News image

தற்கொலை

Updated On :6 பிப்ரவரி 2026, 7:29 pm

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் மனமுடைந்த கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டாா்.

செஞ்சி வட்டம், மரூா் டேங்க் தெருவைச் சோ்ந்தவா் கெ.ராஜா (41), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுபாஷினி (34). சுபாஷினிக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த பால்ராஜ்குமாருக்கும் (33) இடையே தகாத உறவு இருந்துவந்ததாம்.

இந்த நிலையில் பிப்ரவரி 1-ஆம் தேதி இவா்கள் இருவரும் சோ்ந்திருந்ததைக் கண்ட ராஜா, அவா்களைக் கண்டித்தும், கேட்கவில்லையாம். இதனால் மனமுடைந்த ராஜா வியாழக்கிழமை இரவு தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்த போது, ராஜா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பெரியதச்சூா் காவல் நிலையத்தில் ராஜாவின் சகோதரா் அா்ச்சுனன் (46) அளித்த புகாரின்பேரில் பால்ராஜ்குமாா், சுபாஷினி மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, பால்ராஜ்குமாரை வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.